திங்கள், 22 டிசம்பர், 2014

நரம்பு மண்டல ரகசியங்கள்



நரம்பு மண்டல ரகசியங்கள் - 


தெரிந்துகொள்வோம்... 



மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் 

அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக 

உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் 


அசைவுகளை கட்டுப்படுத்துவது, சூடு, 

குளிர்உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு 

மண்டலமே காரணமாகின்றது. நரம்பு 

மண்டலம் 

கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது... 

தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: 

இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் 

சூட்டினை சீராய் வைத்தல் இவற்றிற்குப் 

பொறுப்பாகின்றது.




மோட்டார் நரம்பு பிரிவு:


அசைவுகளையும், செயல்களையும் 

மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் 

தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க 

வைக்கின்றது.


சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு:

தோல், தசைகளிலிருந்து தண்டுவடத்திற்கும், 

மூளைக்கும் எடுத்துச்செல்வது. இது அங்கு 

ஆராயப்பட்டு வலி, எரிச்சல், இதம் போன்ற 

உணர்ச்சிகளை மனிதன் உணரச் செய்கின்றது. 

நரம்பு மண்டலமே அனைத்திற்கும் காரண 

மாவதால் நரம்பு வலியும் அல்லது நரம்பு 

பாதிப்பும் மனிதனின் வாழ்வினை வெகுவாக 

பாதித்து விடுகின்றது.

நரம்பு வலியின் அறிகுறி என்ன?

நரம்பு பாதிக்கப்படும் பொழுது பலவித 


அறிகுறிகள் தெரியும். பாதிப்பு மூளையிலா, 

தண்டுவடத்திலா அல்லது பரவியுள்ள புற 

நரம்புகளிலா என்பதனைப் பொறுத்து 

அறிகுறிகள் இருக்கும். தன்னிச்சை இயக்க 

நரம்பு 

பாதிக்கப்படும் பொழுது...

* நெஞ்சு வலியினை உணர முடியாது


* அதிக வியர்வை அல்லது குறைந்த வியர்வை 

இருக்கும்.

* வறண்ட கண், வாய் காணப்படும்.

* மலச்சிக்கல் ஏற்படும்.

* சிறுநீரக பை சரிவர இயங்காது.

* உடல் உறவில் பிரச்சனை இருக்கும்.

மோட்டார் நரம்பு இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் 


பொழுது.

* உடல் சோர்வு ஏற்படும்.

* தசை தேய்மானம் காணப்படும்.

* தசை துடிப்பு இருக்கும்.

* பக்கவாதம் ஏற்படும்.

சென்சரி அதாவது உணர்ச்சி நரம்பு பாதிப்பு 


ஏற்படும் பொழுது..

* வலி இருக்கும்.

* மதமதப்பு இருக்கும்.

* குறுகுறுப்பு, குத்தல் இருக்கும்.

* எரிச்சல் இருக்கும்.

* குளிர், சூடு தாங்காமை இருக்கும். சிலருக்கு 


இரண்டு மூன்று தொந்தரவுகள் கூட 

அறிகுறிகளாகத் தெரியலாம். பொதுவாக 100 

வகையான நரம்பு பாதிப்புகள் உள்ளன. வயது 

கூடும் பொழுது புற நரம்பு பாதிப்பு கூடும். 

நாலில் 

ஒரு சர்க்கரை நோயாளிக்கு இப்பாதிப்பு எளிதில் 

ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு நரம்புகளை 

பாதிக்கலாம்.

விபத்துக்கள், சில மருந்துகள் போன்றவை கூட 


நரம்புகளை பாதிக்கலாம். சத்து குறைபாடு, 

தொற்றுநோய் போன்றவைகளும் நரம்பு 

பாதிப்பினை ஏற்படுத்தலாம். அதிக நபர்களுக்கு 

இதனை முழுமையாக சரி செய்ய முடிகின்றது. 

சின்ன அறிகுறி இருந்தாலும், உடனடி பெறும் 

மருத்துவ ஆலோசனை நல்ல நிவாரணம் 

அளிக்கும். அடிப்படை காரணம் அறிந்து 

சிகிச்சை 

செய்யவேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை 


அளவினை சரி செய்யவேண்டும்.

* சத்து குறைபாடுகளை சரி செய்யவேண்டும்.

* பாதிப்பு தரும் மருந்துகளை மருத்துவர் 


ஆலோசனைப்படி நீக்குதல் வேண்டும்.

* அடிபட்ட இடத்தில் தகுந்த சிகிச்சை தர 


வேண்டும்

* மற்ற பாதிப்புகளுக்கு உரிய மருந்து எடுத்துக் 


கொள்ள வேண்டும் சிலருக்கு திடீரென கால், 

கை சற்று சோர்வாய் இருப்பது போன்று 

இருக்கும். நரம்பு முறையாய் வேலை 

செய்யாததால் ஏற்படும் பாதிப்பு இது. அதிக 

கவலை, டென்ஷன் இருப்பவர்களுக்கு 

அதிகமாக இவ்வகை பாதிப்பு ஏற்படுகின்றது.

அடிபட்ட பிறகு, முதுகுவலி, கழுத்துவலி 


இருக்கும்போது இத்தகு பாதிப்பு ஏற்படுகின்றது. 

அதிக சோர்வு, அதிக வேலை செய்து ஓய்ந்துப் 

போகுதல் போன்றவை இத்தகு பிரச்சினைகளை 

உருவாக்கும். இதற்கு உடற்பயிற்சியும், 

பிஸியோதெரபி எனப்படும் குறிப்பிட்ட 

பயிற்சியும் நல்ல பலனை அளிக்கும்.


சில சமயம் மனநல நிபுணர் ஆலோசனையும் 

தேவையே. (அதிகம் பாதிப்பினை பற்றியே 

நினைக்காது இருப்பதும் முன்னேற்றத்தினைத் 

தரும்) சிலருக்கு வளைந்த விரல்கள் 

இருக்கலாம். மணிகட்டு சுழன்று கை கீழ் 

நோக்கி பிரண்டு இருக்கலாம். அவரவர் 

உடலுக்கு ஒரு வரைப்படம் உண்டு. சில 

காரணங்களால் மூளை இந்த மடிந்த 

விரல்களையும், பிசகிய கையினையும் சரியான 

வரைபடமாக எடுத்துக் கொள்கின்றது.

மூளையை மீண்டும் சரியான வரைபடத்திற்கு 


மாற்றுவதே பயிற்சி ஆகின்றது அல்லது 

தொடர்ந்து அப்படியே இருந்தால் பாதிக்கப்பட்ட 

பகுதி நலிந்து செயலிழக்கின்றது.

* அடிக்கடி உட்கார்ந்து, எழுந்து, நடந்து பயிற்சி 


கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* மருத்துவ ஆலோசனை மிக அவசியம். 


திடீரென 

ஒருவர் உடல் உதறி அப்படியே நினைவற்று 

விழுந்து விடுவார். சற்று கூடுதல் நேரம் 

அவ்வாறே இருப்பார். பிறகு எழுந்து விடுவார். 

இதன் காரணம், நரம்பின் இயக்கம் சிறிதுநேரம் 

முறையற இயங்காததால் ஏற்படும் பாதிப்பு 

ஆகின்றது. மருத்துவ சிகிச்சையில் இன்று 

இப்பாதிப்பிற்கு நவீன மருந்துகள் உள்ளன.

* சோபாவிலோ, படுக்கையிலோ ஓய்வில் 


இருக்கும் பொழுது பலருக்கு இது 

ஏற்படுவதுண்டு.

* நீண்ட நேர பாதிப்பு இருந்தாலோ

* தலை, கை, கால்கள் முறையற்று நடுங்குதல் 


இருந்தாலோ.

* வாய் விட்டு திடீரென அதிக மூச்சு விடுவது 


போன்று கண்டிப்பாய் மருத்துவ சிகிச்சை பெற 

வேண்டும். பொதுவில் பலமின்மை என்பதனை 

அதிக சோர்வுடன் இருந்தாலும் வழக்கில் 

கூறுவர். பலமின்மை என்பது சோர்வுடன் 

இருந்தாலும், ஒரு சாதாரண பொருளை (பால் 

டம்ளர்) தூக்க முடியாமல் இருப்பதோ, நகர்த்த 

முடியாமல் இருப்பதோ ஆகும். (உ-ம்) ஒருவரது 

வலது கால் பலமிழந்து இருக்கின்றது என்றால் 

அவரது வலது பக்க தண்டு வடமோ அல்லது 

இடது பக்க மூளையோ பாதிப்படைந்து 

இருக்கக்கூடும். இதனை செயல்பாட்டு பலவீனம் 

என்று கூறுவர்.

தலையில் அடிபட்டால்

சாதாரணமாக தலையில் இடித்துக் கொள்வதில் 


இருந்து, ரோட்டில் ஏற்படும் விபத்து வரை என 

பல காரணங்களால் தலையில் அடிபடக் கூடும். 

மண்டையில் சற்று அமுங்கினால் போல் 

இருந்தாலோ, மண்டை ஓட்டில் லேசாக விரிசல் 

தெரிந்தாலோ பாதிப்பு அதிகம் என்றே கொள்ள 

வேண்டும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்...

* நினைவின்றி விழுந்தாலோ

* சற்று சாதாரணமாக எழுந்து விட்டு பின் 


நினைவின்றி விழுந்தாலோ


* கண் கருவிழிகள் இருபுறமும் சமமாக 

அசையாமல் விட்டாலோ, கருவிழி விரிந்தாற் 

போல் தெரிந்தாலோ

* கை, கால் அசைவுகள் மிகவும் குறைந்தாலோ, 


அசைவின்றி இருந்தாலோ இவருக்கு மிக 

அவசர 

சிகிச்சை தேவை என்பதனை உணருங்கள். சிலர் 

அடிபட்ட சில மணி நேரங்கள், சில நாட்கள், சில 

வாரங்கள் கூட கழித்து மயங்கி விழுவர். 

இவர்களுக்கு,

* தலைவலி

* குழம்பிய பேச்சு

* வாந்தி

* மூக்கிலும், காதிலும் இருந்து ரத்தக் கசிவோ 


அல்லது திரவ கசிவோ இருக்கும்.



ஆகவே தலையில் அடிபட்டு ஒன்றுமில்லை 

என்றாலும், மருத்துவர்கள் சில வாரங்கள் வரை 

அவரை கண்காணிப்பில் இருக்கச் சொல்வர். 

மண்டையில் அடிபட்டு ரத்தப்போக்கு சற்று 

அதிகமாக தெரிந்தால் மிகவும் அதிர்ச்சி 

கொள்ள 

வேண்டாம். முகம், தலை இவற்றுக்கு ரத்த 

ஓட்டம் அதிகம் என்பதால், சிறு காயம் கூட 

அதிக ரத்தப்போக்கினைத் தரும்.

இருப்பினும், காயம் சிறியதா, பெரியதா 


என்பதை 

மருத்துவரே முடிவு செய்யவேண்டும். இம்மாதிரி 

அடிபடும் ஒருவருக்கு சுத்தமான கட்டை விரல் 

கொண்டு லேசாக அந்த இடத்தை அழுத்த, சிறிய 

காயங்கள் கட்டுப்படும். மருத்துவமனை 

செல்லும்வரை சுத்தமான பேண்டேஜ் துணி 

கொண்டு, காயம்பட்ட இடத்தில் லேசான 

அழுத்தம் கொடுக்கலாம்.

காயம் அடைந்தவரை உட்கார வைத்து, அவர் 


தலையையும், தோள்பட்டையையும் நாம் 

பின்னால் பிடித்துக் கொள்ளவேண்டும். 

மருத்துவர் மூலம் நரம்பு பிரச்சினைகளை 

அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சைகள் பெறுங்கள். 

நலம் பெற்று வாழுங்கள்.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

Cancer Prevention Research


கேன்சர் நோய் - சில உண்மைகள் !!!
குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா?
கடந்த 16 ஆண்டுகள் ஆராய்ச்சியில் 9 லட்சம் குண்டு பேர்வழிகளின் சுகாதார அறிக்கையையும் அவர்கள் வார்த்தைகளையும் ஆராய்ந்தபோது சில உண்மைகள் தெரிய வந்துள்ளதாக கனடா கேன்சர் மருத்துவ சொசைட்டி கூறியுள்ளது.
ஆண்களில் 52 வயதுக்கு மேல் பெண்களில் 62 வயதுக்கு மேல் குண்டாக இருப்பவர்களில் பலருக்கும் புற்றுநோய் வந்துள்ளது. மார்பகம், கருப்பப, குடல், சிறுநீரகம், கல்லீரல், மூத்திரப்பைகள் ஆகியவற்றில் கேன்சர் நோய் இவர்களில் பலருக்கு வந்துள்ளது. குறிப்பாக ஆண்களில் குடல், கல்லீரல், வயிறு, வாய் என்று சில பகுதிகளில் வருவது பொதுவாக உள்ளது.
குண்டாக இருப்பவர்களுக்கு மற்றவர்களை விட ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோரின், இன்சுலின் ஆகிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். அதனால் புற்றுநோய் வரும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிபுணர் பார்பரா ஒய்லி கூறுகிறார். அதனால் தான் டாக்டர்கள் நாற்பதை தாண்டினால், பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்
சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ
1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்
2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்
3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ்ல எதுவும் வைக்கவேண்டாம்
பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.
இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...
நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(ஜோஹ்ன்ஸ் HOPKINS) என்ற மருத்துவ விஞ்ஞானி சொல்கிறார்.
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (நுத்ரிதிஒநல் deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.
5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது
8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.
9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own கில்லெர் cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.
14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, எபாஸ் etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது.. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)
15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், சுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.
உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது.
சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..
4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது.
ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும்.

சனி, 6 டிசம்பர், 2014

விந்துவைப் பாதிக்கும் 10 matters


விந்துவைப் பாதிக்கும் 10 matters 

விந்தணுக்களை பாதிக்கும் பத்து விசயங்கள்..!
சுடுநீர் குளியல்
பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.
உள்ளாடை
அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.
மொபைல்
பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும்,விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தம்
மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
போதிய உடலுறவு இல்லாமை
உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
ஆல்கஹால்
ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடித்தல்
சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
சோயா பொருட்கள்
ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.
டிவி பார்த்தல்
பெரும்பாலான ஆண்கள் டிவி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும்ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது.
லேப்டாப்
தற்போது லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.